தலைமைத்துவம்

துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங், மே மாதம் 15ஆம் தேதி, சிங்கப்பூரின் நான்காவது பிரதமராகப் பதவியேற்கவிருக்கிறார்.
தம் பாட்டியுடன் நெருங்கிய உறவு வைத்திருந்த ஃப்ரோடோ ஜோஷுவா மெத்தையஸ், 19, பாட்டியின் இறப்புக்குப் பிறகு சமூகத்தில் இருக்கும் இதர மூத்தோருக்கு தொண்டு மூலம் உதவிக்கரம் நீட்ட முனைந்தார்.
சிங்போஸ்ட்டின் சிங்கப்பூர் பிரிவுக்கான தலைமை நிர்வாக அதிகாரிப் பொறுப்பை திரு ஷாஹ்ரின் அப்துல் சலாம் மே 1 முதல் ஏற்கிறார். திருமதி நியோ சு யினிடமிருந்து அவர் இப்பொறுப்பை ஏற்பார் என்று ஏப்ரல் 1 அன்று சிங்போஸ்ட் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது
‘கேஸ்’ எனப்படும் சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்தின் புதிய தலைமை இயக்குநராகத் திரு டெக்ஸ்டர் டே, ஏப்ரல் 1ஆம் தேதி நியமிக்கப்பட்டுள்ளார்.
மனிதவள அமைச்சின் முன்னாள் தலைமைச் சட்ட அதிகாரி ஆல்வின் கோ எதிர்வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சிங்கப்பூர் போட்டித்தன்மை, வாடிக்கையாளர் ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளார்.